Friday, February 19, 2010

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தெரியாது: ஐ.நா.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ எண்ணிக்கை எதனையும் ஐ.நா. கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு நாற்பதாயிரத்துக்கும் இடைப்பட்டது என்று இலங்கையில் ஐ.நா.வின் சார்பாகப் பேசவல்ல முன்னாள் அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை என்று ஜான் ஹோம்ஸ் கூறினார்.

"ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது உண்மை என்றாலும், கொல்லப்பட்டோரின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை" என்றார் ஜான் ஹோம்ஸ்.

போரில் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் சுயாதீன விசாரணை வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துவதாக அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், முன்பை காட்டிலும் முகாமில் இருப்போருக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

No comments:

Post a Comment