யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும், வன்னியில் இரண்டு சிங்கள வேட்பாளர்களும் போட்டியிடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத் தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்துக்கான வேட்பாளர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகள் இன்று நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கூற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.
பொறுப்புள்ளவர்கள் என்ற அடிப்படையில் தம்மால் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment