Friday, February 26, 2010

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு யாழ். செயலகத்தில் வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,ரி.ஸ்ரீகாந்தா ஆகியோர் அதிலிருந்தும் பிரிந்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற புதிய கட்சியொன்றை கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிவாஜிலிங்கம் தமது கட்சி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இடது சாரி முன்னணியுடன் இணைந்து குடை சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது எனத் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரிலும்,வெளி மாவட்டங்களில் இடதுசாரி முன்னணி என்ற பெயரிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் மேலும் கூறினார்.

யாழ் மாவட்ட வேட்பாளர்விபரம்

1) கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா சட்டத்தரணி( முன்னாள் பா உ)
2) கனகலிங்கம் சிவாஜிலிங்கம்( முன்னாள் பா. உ)
3) வேலுப்பிள்ளை இரத்தினம் ஜெகராசா
4) தமியான் யூலி தயான் (பட்டதாரி)
5) அருமைநாதன் தவநாதன்
6) சுப்பிரமணியம் செல்வநேசன்( பட்டதாரி)
7) பொன்ராஜா பூலோகசிங்கம் (சட்டத்தரணி)
8) கனகசபாபதி நமநாதன் (சட்டத்தரணி)
9) முகமது இஸ்மாயில் உம்மு ஷகிலா
10) விஜயதர்மா கேதீஸ்வரதாசன்
11) சண்முகலிங்கம் சஜீவன் (பட்டதாரி)
12) தியாகராசா இராசரத்தினம்

No comments:

Post a Comment