Friday, February 19, 2010

இந்திய முதலீட்டை வரவேற்றுள்ள யாழ். வர்த்தகர்கள்

இந்திய முதலீடுகளை யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தினர் வரவேற்க தயாராகவும், விருப்பத்துடனும் இருப்பதாக இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதி மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருக்கின்ற போதும், யாழ். வர்த்தகர்கள் இந்திய முதலீட்டுக்கான ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியாவே உதவி புரிந்ததாகவும், நிலையான ஒரு அரசியல் தீர்வுக்கு இந்தியா முறையாக செயற்படவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் கருதுகின்றனர்.

அத்துடன் தமிழ் மக்கள் வெறுக்கும் அளவுக்கு, தமிழக முதல்வர் மு. கருணாநிதி உச்சக் கட்டத்தில் போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி தமிழ் மக்களை ஏமாற்றியதாகவும் அவர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தின் தலைவர் ஆர். ஜெயகுமார், இந்திய முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களையும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என அந்த செய்தி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய மற்றும் யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தக நலவாய மாநாடு ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 27 – 29ம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment