Friday, February 19, 2010

கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்

நுவரெலியா மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான முன்மொழிவை அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடைவிலகி அரசங்கத்துடன் இணைந்து கொண்ட எஸ் பி திஸாநாயக்க வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பல உலக சாதனைகளை ஏற்படுத்தியுள்ள முத்தையா முரளிதரனின், புகழைப் பயன்படுத்தி மலையக தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

எனினும் இதனை முரளிதரன் தரப்பு உறுதி செய்யவில்லை. இந்த செய்தியில் உண்மையில்லை என அவருடைய தந்தையார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் முத்தையா முரளிதரன் தொடர்பில் பெரும்பான்மையான மலையக மக்கள் மத்தியில் அதிருப்தியான கருத்துக்களே நிலவுவதாக கூறப்படுகிறது. அவர், தமிழராக இருந்தபோதும் தமிழ் மொழியில் கதைப்பதற்கு தயங்குவதே இதற்கான பிரதான காரணமாகும்.

ஏற்கனவே மற்றுமொரு கிரிக்கட் வீரரான சனத் ஜெயசூரிய மாத்தறையில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment