Friday, February 26, 2010

மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரிக்கு புதிய ஞானோதயம் பிறந்தது?

அரசியல், தேசியம் என்று இன்னும் காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை என மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.தங்கேஸ்வரி கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கருணாவுடன் இணைந்து தற்போது மகிந்த அரசுடன் இணைந்துள்ள அவர், எதிர்வரும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.இதுதொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல், தேசியம் என்பவற்றுக்கு மேலாக இன்னுமும் பல தேவைகள் உடனடித் தேவையாகா உள்ளன.

இவற்றினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நான் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றேன், 30 வருட போரில் பாதிக்கப்பட்ட படுவான்கரை மக்களுக்கு தேவையான உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதே எனது பிரதான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தனை காலமும் தமிழ்த் தேசியம் குறித்து பேசியவர், முள்ளி வாய்க்காலில் மக்கள் அவலப்பட்டபோது வேதனைப்படாதவர் இப்போதுதான் தமிழ் மக்கள் குறித்து வேதனைப்படுகின்றார் என்று கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள், எல்லாம் கருணாவுடன் இணைந்ததால் வந்த புதிய ஞானோதயம் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment