Monday, April 26, 2010




கொடுங்கோலன் ராஜபக்ச, திருப்பதி வழிபாடு: ஆந்திர முதல்வர் பலி! இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம்: வைணவ துறவி
[ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2009, 04:13.41 AM GMT +05:30 ]
மனித அரக்கன் மகிந்த ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி கூறியுள்ளார்.
அந்த வைணவ துறவி தெரிவித்திருப்பதாவது:-
உலகின் கொடும் அரக்கன்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச! இந்த அரக்கனுக்கு உதவி செய்த இந்திய பார்ப்பனியம், அமெரிக்க மற்றும் சீனாக்காரர்கள்.
மகிந்த ராஜபக்ச இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார். முதல் முறை வந்தார். இறுதி யுத்தக் கட்ட காலங்களில், ஹெலிகொப்டர் விபத்தில் இறந்து போனார் ஆந்திர முதலமைச்சர்.
இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் மனித அரக்கன் மகிந்த ராஜபக்ச. இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும்.
ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டாம் நடந்தது கிடையாது. அந்த அளவிற்கு மிகப் பெரும் உலகப் பாவி இந்த மகிந்த ராஜபக்ச. தமிழர்களின் எல்லை தெய்வமான ஏழு மலையான் பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதை..அனுமதி வழங்கிய ஆந்திர அரசுக்கு தகுந்த தண்டனையை வழங்கி இருக்கிறது திருப்பதியின் ஏழுமலையான்! இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது என்று கவலை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.
எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த ராஜபக்‌ஷே நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க தக்க பரிகார பூஜைகள் யாகங்கள் நடத்தப்படவேண்டும். இல்லை என்றால் அந்திர தேசத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அவலமும் அழிவும் ஏற்படும்.
எனவே உண்மையான வைணவர்களும், ஏழுமலையான பக்தர்களும் துரிதமாக செயற்பட்டு திருப்பதி கோவிலில் தீட்டுக் கழிக்கும் பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அந்த வைணவத் துறவி கேட்டுக்கொண்டார்.







Welcome to Tamil Heroes DayHi,Your friend ( rajan ) wants you to visit the following site Maaveerar Naal:http://www.tamilheroesday.com/Regards,Webmaster,TamilHeroesDay.Com













































புலிகளுடன் தமிழர் பிரச்சனையும் செத்துவிட்டது அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள்; குமுறும் மகிந்தா?

புலிகளுடன் தமிழர் பிரச்சனையும் செத்துவிட்டது அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள்; குமுறும் மகிந்தா?�வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியாகிப் போன ஒன்று. இனிமேல் அதுபற்றிப் பேசுவதற்கே இடமில்லை.� என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார். தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடனான சந்திப்பின் போதே அவர் இதை வெளி;ப்படையாகக் கூறியிருக்கிறார். �வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அது காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு-கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு (கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்து விட்டனர். அதற்காக அவர்கள் ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது- முறையானது. ஆகவே, காலாவதியாகிப் போன வடக்கு- கிழக்கு இணைப்பை விடுத்து வேறு விடயங்கள் பற்றிப் பேசலாம்.� இப்படிக் கூறியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது- அது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. அதில் தலையிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. ஆனால் இப்போது என்னவென்றால் அது காலாவதியாகிப் போய்விட்டது- இனித் தோண்டியெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து வடக்கு-கிழக்கு இணைப்புக்கு அவர் எதிரானவர்- என்பது உறுதியாகியுள்ளது. அது ஒருபுறத்தில் இருக்க, இந்தச் சந்திப்பின்போது- கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டம் ஆகியவற்றின் சனத்தொகை வீதம் குறித்து அவர் கூறியிருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இப்போது முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர் என்று அவர் கூறியிருப்பது அப்பட்டமான தவறு. 2007ம் ஆண்டில் அரசாங்க மதிப்பீடுகளின் படி கிழக்கில் தமிழர்கள் தான் பெரும்பான்மையினர். இங்கு தமிழர்கள் 40.39 வீதமும், முஸ்லிம்கள் 37.64 வீதமும், சிங்களவர்கள் 21.64 வீதமாகவும் இருக்கின்றனர். இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீடு. ஆனால் அரசாங்கதின் இந்த மதிப்பீட்டையே தவறாக்கும் வகையில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர் என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருப்பது- வடக்கு- கிழக்கு இணைப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கே என்பது தெளிவாகத் தெரிகிறது. முஸ்லிம்கள் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை அவர் உருவாக்க முனைகிறார். வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பது குறித்து முஸ்லிம்களிடத்தில் அச்சம் இருந்தது உண்மை. ஆனால் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தமக்கு தனியான நிர்வாக அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்ததே தவிர, தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள கோரவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாட்டை தீவிரமாக்கும் வகையில் ஜனாதிபதியின் கருத்துகள் அமைந்திப்பதை காணமுடிகிறது. சிங்களவர்கள் தான் வடக்கு-கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ஸவோ, முஸ்லிகள் இணைப்பை எதிர்ப்பார்கள் என்றே கூறியிருக்கிறார். சிங்களவர்களை இந்த இடத்தில் அவர் நியாயவாதிகளாக்க முற்படுகிறார். இனரீதியான ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றால் அதை இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்துக்குள் ஏன் செய்ய முடியாது என்று ஜனாதிபதி கருதுகிறாரோ தெரியவில்லை. அதேவேளை ஒரு பிரதேசத்துக்கு தனியொரு இனம் உரிமை கோர முடியாது என்ற ஜனாதிபதி மகிந்தவின் வாதம், கிழக்கு சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்தும் வகையிலானதாகவே அமைந்துள்ளது. வடக்கு-கிழக்கு இணைப்பை தமிழ்மக்கள் வலியுறுத்துவதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. ஆதாரபூர்வமான புள்ளி விபரங்களின் அடிப்படையில்- தமது தாயகம் பறிபோகும் என்ற அச்சத்தினால் தான் இப்படியொரு கோரிக்கையை அவர்கள் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிழக்கில் 1881ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கீட்டின் போது 58.96 வீதமாக இருந்த தமிழர்கள், 2007ம் ஆண்டு மதிப்பீடுகளின் படி 40.39 வீதமாகக் குறைந்து போயுள்ளனர். அங்கு 1881இல்; 33.66 வீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை, 37.64 வீதமாக அதிகரித்துள்ளது. 1881ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது கிழக்கில் சிங்களவர்களின் எண்ணிக்கை 4.66 வீதம் மட்டுமே. ஆனால் இன்று அவர்களின் எண்ணிக்கை 21.64 வீதமாக பிரமாண்ட வளர்ச்சி கண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் ஒன்றும் சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. இயற்கையின் நியதியால் ஏற்பட்ட மாற்றமல்ல இது. திட்டமிட்டு ஏற்படுத்தப்படடவை. குடியேற்றங்களின் மூலமும், வன்முறைகளை ஏவித் தமிழர்களை விரட்டியடித்தும் தான் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதேநிலை நீடிக்குமானால் இன்னும் சில வருடங்களில்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியது போல தமிழர்கள் கிழக்கில் சிறுபான்மையினராகி விடுவர். காலப்போக்கில் அவர்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இப்படியான திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஊடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசம் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுக்கவே வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பைத் தமிழர்கள் கோருகின்றனர். இதற்கும் அப்பால் தமிழரின் தாயகக் கோட்பாடு என்ற நியாயங்கள் வேறு இருக்கின்றன. இதைக் கூட விதண்டாவாத நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பார்க்கிறார் என்பது இப்போது வெளிப்படையாகியுள்ளது. அடுத்து- வடக்கு-கிழக்கு இணைப்பு கோரிக்கையை புலிகளின் அரசியல் கோரிக்கையாகக் காண்பித்து குப்பைத் தோட்டிக்குள் போடுவதற்கும் முனைகிறார் அவர். தென்னிலங்கை அரசியல் சக்திகள் புலகளின் தோல்விக்குப் பிறகு, ஈழக் கோரிக்கையும், வடக்கு- கிழக்கு இணைப்புக் கோரிக்கையும் புலிகளினது விருப்பங்களாக திரிபுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இவை தமிழ்மக்களின் விருப்பம்- என்பதையும், கடந்த காலங்களில் தேர்தல்களின் மூலம் மக்களாணை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த சக்திகள் புரிந்து கொள்வதாக இல்லை. வடக்கு-கிழக்கு இணைப்பை புலிகளின் அரசியல் கோரிக்கையாகக் காண்பித்து அவர்களுடன் அது செத்து விட்டதாகப் பிரகடனம் செய்ய முற்படுகிறார் மகிந்த ராஜபக்ஸ. இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அடுத்து கொழும்பு மாவட்ட சனத்தொகை விகிதாசாரம் பற்றி அவர் கூறியுள்ள கருத்தும் தவறானது. கொழும்பில் சிங்களவர்கள் 27 வீதமாகக் குறைந்து போய்விட்டனராம். இதுவும் தவறான தகவலே. 2001ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் 41.36 வீதத்தினராகும். ஆனால் தமிழர்கள் 28.91வீதமாகவும், முஸ்லிம்கள் 23.87 வீதத்தினராகவும் உள்ளனர். அப்படியிருக்கும் போது கொழும்பில் தமிழர்களே பெரும்பான்மையினர் என்றும் அதற்காக சி;ங்களவர்கள் போர்க்கொடி உயர்த்தவில்லை என்றும் கூறியிருப்பது இனங்களுக்கிடையிலான உறவை வளர்க்கும் செயலாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிராக சிங்கவர்களைத் தூண்டி விடும் கருத்தாகவே உள்ளது. சரியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இப்படியொரு கருத்தை முன்வைத்திருந்தாலும் பரவலாயில்லை. மிகவும் முக்கியமானதொரு தருணத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களையே அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த பதவிக் காலத்துக்கு தெரிவானால் கூட அவரால் தமிழ்மக்களுக்கு ஆகப் போகும் காரியம் ஏதுமில்லை என்பதையே அவரது கருத்துகள் உணர்த்துகின்றன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் நிலையில் பெரும் மாற்றம்: ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி[ செவ்வாய்க்கிழமை, 08 டிசெம்பர் 2009, 08:58.37 AM GMT +05:30 ]இலங்கை இழைத்த போர்க்குற்றம் குறித்து சூடு பறக்கப் பேசி வந்த அமெரிக்கா தற்போது தனது நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கை நமக்கு தேவை என்ற புதிய மந்திரத்தை வெளியுறவுக்கான செனட் கமிட்டியின் அறிக்கை உச்சரிப்பதால், இலங்கை குறித்த தனது நிலையை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டது அமெரிக்கா.
ஜனாதிபதி தேர்தலில் பெரும் சிக்கலை சந்தித்து வரும் ராஜபக்சவுக்கு அமெரிக்காவின் இந்த முடிவு பெரும் உற்சாகத்தையும், வலுவையும் அளிப்பதாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்கான கமிட்டி, இலங்கையை கடுமையாக குற்றம் சாட்டி முன்பு அறிக்கை சமர்ப்பித்தது. குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய இருவரும் கடுமையான போர்க்குற்றங்களைப் புரி்ந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அவசரம் அவசரமாக ஒரு விசாரணைக் கமிட்டியை அறிவித்தார் மகிந்தா ராஜபக்ச. மேலும், சமீபத்தில் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது அவரை விசாரிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் பொன்சேகாவை அமெரிக்கா விசாரிக்கவில்லை. பொன்சேகாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு விட்டதாக கூட பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல கோத்தபாயவும் கூட அமெரிக்காவிடம் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டார் என்று கூறப்பட்டது. இலங்கை நமக்கு அவசியம்.இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி தலைமையிலான அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில், இலங்கை நமக்கு அவசியமான நாடு. அதன் மீதான போர்க்குற்றங்களை நாம் வலியுறுத்தினால், விசாரணைக்கு உட்படுத்தினால், கடுமையான நிலையை மேற்கொண்டால் அந்த நாட்டை நாம் இழக்க நேரிடும். தெற்காசியாவில் குறிப்பாக வங்கக் கடல் பிரதேசத்தில் இலங்கையின் தேவை நமக்கு முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது இலங்கை நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது அமெரிக்கா. அதாவது, போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் அப்படியே அமுக்கி விட அது தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. கெர்ரி தலைமையிலான வெளியுறவு விவகார கமிட்டி அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை அடுத்த வாரம் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் அறிக்கையின் விபரத்தை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையுடன் தீவிரமான போதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பிரதேசத்திலும் அமெரிக்காவின் நலன் பாதிக்கப்பட்டு விட இது காரணமாக அமைந்து விடக் கூடாது. இலங்கையில் போர் முடிந்து விட்டது. மிகப் பெரிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகள் இயக்கத்தைத்தான் இலங்கைப் படையினர் அழித்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான உலகப் போரின் ஒரு பகுதியாகவே இதை கருத வேண்டும். ராஜபக்ச சகோதரர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது.ராஜபக்ச சகோதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த நெருக்குதல்களையும் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பு ஒன்றினை அழித்துள்ளனர். எனவே இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. மனிதாபிமான விவகாரங்கள், கவலைகளை நாம் புறக்கணித்து விடத் தேவையில்லை. அவையும் முக்கியமானவைதான். இருப்பினும் போர்க்குற்றம் என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இலங்கையுடன் மோதுவது தேவையில்லை. உண்மை நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசு நடத்திய விதம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் கூட, மீள்குடியேற்ற நடவடிக்கைள், சீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் அந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மாணப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கையுடன் வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான உறவுகளையும் அமெரிக்கா வலுப்படுத்த வேண்டும். இலங்கையில் அமைதி நிரந்தரமாக அமெரிக்கா உதவ வேண்டும். அதற்கு மோதல் போக்கு சரியானதாக இருக்காது. அமெரிக்கா - இலங்கை இடையிலான மோதல் முற்றினால், இலங்கை மேற்கத்திய நாடுகள் அல்லாத பிற நாடுகளை நோக்கிச் செல்லக் கூடும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. இதற்கு மாறாக இலங்கையுடன் இணக்கமாக செயல்பட்டு, இலங்கையின் வளர்ச்சி, அமைதிக்கு ஆக்கபூர்வமாக அமெரிக்கா உதவ வேண்டும். அதேசமயத்தில் வடக்கு இலங்கை மக்கள் வளர்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ வழி செய்யவும் இலங்கைக்கு அமெரிக்கா வழி காட்டி உதவ வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி. அமெரிக்க செனட் கமிட்டியின் இந்த அறிக்கை பெரும் திருப்பத்தையும், தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசு இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டால் இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலை அப்படியே தலைகீழாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா வலியுறுத்தாமல் அப்படியே விட்டு விடலாம்.
மேலும், அமெரிக்காவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மீதான போக்கையும் அமெரிக்கா சற்று தீவிரப்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் அமெரிக்க இணைச்சர் ரொபர்ட் பிளேக் கொழும்பு செல்கிறார். தமிழர்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கையை கண்டிப்புடன் வலியுறுத்தவே அவர் வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால் தற்போதைய புதிய அறிக்கை மூலம் அவரது வருகை ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், நிச்சயமாக அவர் ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டுச் செல்வார் என்றும் தெரிகிறது. ராஜபக்ச தரப்பு உற்சாகம்.அமெரிக்க செனட் கமிட்டியின் இந்த புதிய அறிக்கை ராஜபக்சவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாம். பொன்சேகா என்ற பலம் வாய்ந்த நபரை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க செனட் கமிட்டியின் முடிவு தனது நிலை சரிதான் என்பதை ஒப்புக் கொள்வதாக அமையும் என ராஜபக்ச தரப்பு கருதுகிறது. இது இலங்கை வாக்காளர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும், அது தனக்கு சாதகமாகவே முடியும் எனவும் ராஜபக்ச தரப்பு கருதுகிறது. இந்த அறிக்கையை வைத்து பொன்சேகா சவால்களை சமாளிக்க முடியும் எனவும் ராஜபக்ச அரசு கருதுகிறதாம்.
தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் தனித்தேசமாக இலங்கைத்தீவில் வாழ அனுமதிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி[ செவ்வாய்க்கிழமை, 08 டிசெம்பர் 2009, 07:21.33 PM GMT +05:30 ]இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும் யுத்தம் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரும் தொடரும் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு என்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை பாதிப்புறச் செய்வதாகவே உள்ளது குறிப்பாக வன்னியில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட 350000 திற்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவர்களுடய ஊர்களிலே சென்று சுதந்திரமாக குடியமர முடியாதபடி இந்த அவசரகாலச்சட்டம் தடையாக இருக்கின்றது. இராணுவம் இல்லது அரசாங்கம் விரும்புகின்ற இடங்களுக்கு மட்டும் அந்த மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் பெருமளவான பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றது. பெருமளவான நிலங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்காகவும் கையகப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் மீளக் குடியமர எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும். கடந்த காலத்தில் யுத்தம் நடைபெற்றபொழுதிலும் சரி அல்லது அதற்குப் பின்னரும் சரி விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் இன்னமும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த மன உழைச்சலுடனும் அடிப்படை வசதிகள் இன்றியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சொந்த இடங்களில் சென்று குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெறுமனே நடமாட்ட சுநத்திரம் மட்டும் வழங்கப்பட்டால் போதாது அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று தாம் விரும்புவது போன்று குடியமர அனுதிக்கப்படல் வேண்டும் அடுத்த ஐனாதிபதி தெரிவு சம்பந்தமான போட்டியிலே நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் அழிக்கப்பட்ட அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் யாருக்கும் இல்லை. இன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தெருவிலே விடப்பட்டவர்கள் போன்றே விடப்பட்டுள்ளனர். அந்த மக்கள் தாம் முகாம்களில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக தமது உறவினர்களின் உதவியுடன் முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தாலும் கூட அவர்கள் வெளியேறிச் சென்று தங்கியியுள்ள இடங்களில் ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட வசதியில்லாமல் குந்தியிருப்பதற்கு இடமில்லாமல் அவலப்படுகின்றனர். அழிக்ப்பட்ட மக்களுக்கு முழுமையான நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்டிக் கொள்வதற்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வாற்கு ஏற்ற வகையில் முழுமையான நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் இது உடனடியான தேவையாக உள்ளது. இன்று போர் முடிந்த பின்னர் இலங்கையில் இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போலவும் கடந்த 33 வருடங்களாக மட்டுமே இலங்கையில் பிரச்சினை இருந்து வந்தது என்பது போலவும் 33 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினையை தீர்த்துள்ளதன் மூலம் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது போலவும் கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் ஐனநாயகத்தினை ஏற்படுத்தப் போவதாகவம் சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுடய இனப்பிரச்சினை என்பது வெறும் 33 வருடப் பிரச்சினை அல்ல அது புலிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் அல்ல அது 48 ம் ஆண்டில் இருந்து எழுந்த பிரச்சினை அதற்கு முன்னிருந்து 1833ல் ஆங்கிலேயர்களால் தமிழ் இராச்சியம் சிங்கள இராச்சியத்துடன் இணைக்கப்ட்டதன் மூலம் எழுந்த பிரச்சினை. 1948 ம் ஆண்டில் இருந்து 75 ம் ஆண்டுவரை தந்தை செல்வா அவர்கள் ஸ்ரீலங்கா என்ற நாட்டிற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசியல் உரிமைகளை பெற்று வாழ்வதற்கான முழு முயற்சிகளையம் மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 1975ம் ஆண்டிலே ஓர் தெளிவான உரையை ஆற்றிவிட்டுச் சென்றார். இந்நிலையில் நாங்களும் கூறுகின்றோம் நீங்கள் யுத்தத்தினை முடித்திருந்தாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. எங்களுடய அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்பது எங்களது தனித் தேசம் என்பது அங்கீகரிக்கப்படுவதன் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும். அதாவது தமிழர்கள் ஓர் தனித்துவமான ஒரு தேசம் எங்களுக்கு இறைமை உள்ளது எங்களுக்குள்ள இறைமையின் அடிப்படையில் எங்களை நாங்களே ஆளுவதற்கான முழு உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்களது இறைமை பறிக்கப்பட்டு எங்கள் மீது உங்களது இறைமை திணிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதன் மூலம் எங்களது அரசியல் உரிமைகளை நீங்கள் அங்கீகரிக்க முயல்வது தான் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழியாக இருக்கும் மாறாக சீனாவினுடய இராணுவ உதவிகளுடன் வடகிழக்கில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் தேசத்தினை ஓர் சிங்கள பிரதேசமாக மாற்ற முயல்வதன் மூலம் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கி விடுவதற்கோ அல்லது சிங்கள தீவாக மாற்றி விடுவதற்கோ நீங்கள் முயற்சி செய்தால் அது ஒரு பொழுதும் வெற்றியளிக்காது. ஏனெனில் இன்று நீங்கள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் அது கொடுரமான முறையில் முடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்திலே கிட்டத்தட்ட 60000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளது இது நடைபெற்றமைக்கு காரணம் இந்தப் பிராந்தியத்திலே தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் உதவிதான் இவ்வாறன கொடூரமான முடிவுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தொடர்ந்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுத்து சீனாவின் உதவிகளோடு தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்தால் அதே பிராந்திய சக்திகள் மீண்டும் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் மீண்டும் ஓர் பிரச்சினையை உண்டு பண்ண முயல்வார்கள் இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு தமிழ் மக்களாகிய எங்களுக்கு தரவேண்டி உரிமைகளை எங்களுடய தேசம் என்ற அடிப்படையில் எங்களுக்கு தந்து இந்த தீவிலே தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சந்தோசமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு நீங்கள் முன்வரவேண்டும். நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக எங்களது தமிழ் தேசம் தனித் தேசமாக அங்கீகரிக்ப்பட்டு எங்களது இறையாண்மையின் அடிப்படையில் நாங்கள் எங்களை ஆட்சி செய்வதற்கான உரிமை எங்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்று அவரது உரையில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பிரிவு பொறுப்பாளர் கனடாவில் கைது: திவயின தகவல்

விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பிரிவு பொறுப்பாளர் கனடாவில் கைது: திவயின தகவல்
[ வெள்ளிக்கிழமை, 11 டிசெம்பர் 2009, 04:06.14 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பீரங்கிப் பிரிவு பொறுப்பாளர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவில் அடைக்கலம் புகுந்துள்ள அகதிகளில் கோபால் என்ற பீரங்கிப் பிரிவு பொறுப்பாளரும் ஊடுருவியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பீரங்கிப் பிரிவின் பொறுப்பாளராக கடயைமாற்றியமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பலை செலுத்திய மாலுமி ஒருவரையும் கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தமிழர்களின் சவக்குழிகள் மீது சிங்களத்து படைகளின் வெற்றித்தூபி!

தமிழர்களின் சவக்குழிகள் மீது சிங்களத்து படைகளின் வெற்றித்தூபி!
[ வியாழக்கிழமை, 10 டிசெம்பர் 2009, 08:36.08 AM GMT +05:30 ]
சிங்களப்படைகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பிரதேசமான புதுமாத்தளன் பகுதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினருக்கான நினைவுத்தூபி என்ற பெயரில் தமிழ்மக்களை வென்ற வெற்றிச்சின்னத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்தள்ளார்.
“இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை அழிக்க புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு, புலிகளை அழித்து, தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை ஒன்றுபடுத்திய படைவீரர்களின் பெருமையை எப்போதும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது” என்று நினைவுத்தூபி திறப்புவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்நிகழ்வு தொடர்பாகதேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா) அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “இந்த இடம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இடமாகவே பார்க்கப்படுகின்றதே தவிர தமிழர்களை வென்ற இடமாகவோ கொன்றொழித்த இடமாகவோ பார்க்கப்படவில்லை. இலங்கையில் பிரிவினைக்கான பயங்கரவாத ஆயுதப்போராட்டத்தை முடிவிற்குகொண்டு வந்த இடமாகவே பார்க்கப்படுகின்றது” என தெரிவித்தார்.
யுத்தத்தில் தமிழ்மக்களை வெற்றி கொண்ட ஆணவத்தில் தமிழ்மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக குறிப்பிட்டு “பயங்கரவாதம்” என்ற சொல் வட்டத்திற்குள் முன்னைய சிங்களத் தலைவர்களைப் போல உள்ளடக்க முனைகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்.
ஜனாதிபதி அவர்கள் யுத்தம் முடிவிற்கு வந்ததாக ஆறு மாதங்களிற்கு முன்பே அறிவித்து விட்டார். தற்போது ஆயுதக்கிளர்ச்சி முடிவுக்கு வந்த இடத்தில் வெற்றி நினைவுத்தூபியும் அமைத்து விட்டார். இப்படியான கருத்துப்பரம்பலின் சூழலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் கேள்விகளை கேட்கத் தோன்றுகின்றது.
ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டால்!
• ஏன் இன்னும் தமிழர்வாழும் பிரதேசங்களில் கூடுதலான படைகளை வைத்திருக்கிறீர்கள்?
• ஏன் வன்னிப்பிரதேசத்தில் பாரிய இராணுவமுகாம்களை; மேலும் அமைக்கவேண்டும்?
• தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி கடந்த இரண்டு தசாப்தங்களாக அகதிகளாக இருக்கும் மக்களை இன்னும் குடியேற்றாமல் ஏன் வைத்திருக்கிறீர்கள்?
• விடுதலைப்புலிகளின் கனரக ஆயுததாக்குதல் வீச்சு எல்லைக்குள் முகாம்களின் பிரதான இடங்கள் வந்துவிடக்கூடாது என்றும் இராணுவ மைய இடங்கள் குறுகிய தாக்குதல் எல்லைக்குள் இருக்கக்கூடாது என்பதால் உயர்பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டதாக கூறினீர்கள். தற்போது ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்ததாக நீங்கள் அறிவித்த பின்னர் ஏன் இந்த உயர்பாதுகாப்பு வலயம்?
•மக்கள் வசிக்கும் பகுதிகளில் படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க மறுப்பது ஏன்?
•இன்றும் மக்களின் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்?
•நாட்டில் இன்னும் ஏன் அவரசால தடைச்சட்டம்,பயங்கரவாதச் தடைச்சட்டம் அமுலில் உள்ளது? என்பது போன்ற பல கேள்விகளை தங்களிடம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கான விடை ஒருபோதும் கிடைக்காது.
இலங்கையில் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்கள் தங்களிற்கான அரசியல் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக மற்றும் அகிம்சை வழியில் போராடிய போது அப்போராட்டங்கள் இலங்கை அரசபடைகளைக் கொண்டு ஆயுதவழி மூலம் ஒடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது. 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமான தமிழர்களிற்கான தனியரசை அமைக்கும் இலக்கோடு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து போராடி இற்றைவரை அந்த மக்களின் ஆணையை நிறைவேற்ற 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களை இந்த அறப்போருக்கு ஆகுதியாக்கினார்கள்
இறுதிவரை கொள்கைக்காகவே நின்று போராடி வீரமரணமடைந்த மாவீரர்களினதும், அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ்மக்களின் விதைகுழிகளின் மீதும் நின்று, தமிழர்களை சிங்களம் வென்ற நினைவுத்தூபியை எழுப்பி இறுமாப்புடனும் திமிருடனும் வெறுமனே இது “பயங்கரவாத ஆயுதக்கிளர்ச்சி என்று சொல்வதை எந்த தமிழன் ஏற்பான் என்று ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் நினைக்கின்றாரோ தெரியவில்லை.
மேலும் இவ் இடத்தை தமிழ்மக்களை வென்ற இடமாக கருதுவதாக எண்ண வேண்டாம். இந்த இடத்தில் தான் இன நல்லிணக்கம் ஏற்பட்டது. அதைப் பெற பாடுபட்ட வீரர்களை நினைவுகூறும் நினைவுத்தூபியே இது என்ற வார்த்தை ஜலாங்களை கூறுகின்றார் ராஜபக்ச அவர்கள். ஆனால் அதை வெற்றித்தூபியாக சிங்களம் நினைத்தாலும் அந்த தூபியைப் பார்க்கும் ஒவ்வொரு மானத்தமிழன் மனங்களிலும் இத்தூபியை அப்புறப்படுத்தும் நாள் தான் இலங்கைத்தீவில் தமிழ்மக்களிற்கான விடுதலைநாள் என்பதையேநினைவுபடுத்திக் கொண்டிருக்கும் என்பதை சிங்களம் கணிக்கத் தவறிவிட்டது!
மற்றும் தமிழ்மக்களிடம் தனக்கான வாக்கைப்பெற சலுகைகளையும் மாயாயால வார்த்தைகளையும் தமிழ் மொழியில் பேசிக்கொண்டு வருவதும். சிங்கள மக்களிடம் செல்லும்போது, தமிழர்களை இறுதியாக வென்றழித்த இடத்தில் சிங்களத்தின் நினைவுதூபியை நிறுவி, சிங்களத்தின் வீரத்தை பறைசாற்றியவராக காட்டியே ராஜபக்ச அவர்கள் சிங்களத்தின் வாக்குகளை பெறப்போகின்றார்.
இந்த அரசியல் சூட்சுமத்தையும் அரசியல் விளையாட்டுகளையும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழினத்திற்கு பேரவலத்தைத்தந்து தமிழ்மக்களை சின்னாபின்னமாக்கிய ராஜபக்ச அவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெரும்பான்மை பங்காளர்கள் தமிழர்களே என்பதைதமிழினம் மறக்கக்கூடாது.
மேலும் தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டத்தில் நடைபெற்ற சரி, பிழைகள் என்ற விமர்சனங்களிற்கு அப்பால் இறுதிவரை கொள்கைக்காகவே நடந்தார்கள், பல அர்ப்பணிப்புகளைசெய்தார்கள், தமிழ்மக்களின் போரிடும் வீரமரபை உலகறியச் செய்தார்கள், தமிழர்களாக தமிழர்களை பெருமைப்பட வைத்தார்கள். தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வாக மாவட்டசபையைத்தான் தருவோம் என்ற சிங்கள ஆட்சியாளர்களை உள்ளக சுயாட்சித் தத்துவம் வரை பேசப்பண்ணினார்கள். தமிழ்மக்களின் விடுதலைக்காகவே இறுதிவரை தணியாத இலட்சியத்துடன் போராடி வீரமரணமடைந்தார்கள்.
இப்போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுவதை சிங்களத்திடம் தங்களின் இருப்பு அரசியலுக்காக கைகட்டி நின்று வாலாட்டும் தமிழ் விரோத சக்திகள் வேண்டுமென்றால் தலையாட்டி ஒப்புக் கொள்வார்கள். ஆனால் தமிழ்மக்களல்ல என்பதை எப்போதும் நிரூபித்து நிற்பார்கள்.
அண்மைக்காலமாக ராஜபக்ச அவர்களின் அரசியல் நகர்வுகளில் சிங்களப் பேரினவாதத்தின் கொக்கரிப்புத்தன்மை தெரிகின்றது. புலிகளின் அழிவுடன் வடக்கு கிழக்கு இணைப்பும் செத்துவிட்டது என்று ராஜபக்ச அவர்கள் கூறிய போதும் பம்பலப்பிட்டியில் சிங்கள பொதுமக்கள் பொலீசுடன் இணைந்து கடலிற்குள் தமிழ் பொதுமகனை கும்பிடக் கும்பிட அடித்துக் கொன்றபோதும் புலிகள் இல்லாதபடியால் தான் இப்படி நடந்ததோ? என்ற சிந்தனையைத் தமிழ்மக்களிடம் தூண்டியிருக்கும் என்பதை இங்கு நினைவு கூருவது பொருத்தமானது.
தமிழ்மக்களின் போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளதேயன்றி தமிழ்மக்களின் வீரமும் தியாக உணர்வும் எப்போதும் பின்னடைவைச் சந்திக்காது என்பது வெளிப்படை. தமிழ்மக்களின் மானமறவர்களான மாவீரர் கல்லறைகளை அழித்தாலும் மனங்களில் மாவீரர்களின் கனவுகளையும் நினைவுகளையும் சுமந்திருக்கும் தமிழ்மக்கள் இருக்கும் வரை அவைகள் மறக்கப்படமாட்டாது என்பதுடன் மாவீரர்களின் கனவுகளைச் சுமந்த தமிழ் மக்களின் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். அதற்கான காலம் கனியும் வரை தமிழினம் ஒற்றுமையை பலமாக்கி செயற்படவேண்டும்.
அபிஷேகா
பின்னூட்டலுக்காக











































































































































































Sunday, April 25, 2010

Brothersoft Downloads Dispatch

If you are having trouble viewing images, click here.
Brothersoft Weekly Newsletter
2010-04-25
Become a fan of BrothersoftFollow us @BrothersoftInstall Brothersoft toolbar
TurboTax Online
Simple tax return?
Get your biggest
refund, guaranteed
Start Now
ProgSense
A social software
updater helps you to
update your software
easier and quicker.
Try it Now
Opera 10.52.3370
RC 5/ 10.51
1.
Firefox 3.7/ 3.6.4
Beta/3.5.9
2.
Google Chrome
5.0.375.17 Dev/4.1
3.
Norton Internet
Security 2011
4.
Adobe Flash Player
10.1 RC 2/10.0.45.2
5.
AOL Instant
Messenger 7.3 Beta 1
6.
Trend Micro HijackThis
2.0.4
7.
Spyware Doctor 2010
7.0.0.545
8.
BS.Player 2.53
9.
Paint.NET 3.5.5 Beta
1 / 3.5.4
10.
1. Brothersoft Community Toolbar
Stay connected with Brothersoft and get so much more..390494
2. FrostWire
The Fastest BitTorrent+Gnutella P2P Program!.183267
3. FormatFactory
Convert all popular video,audio,picture formats to others(Supports 48 languages).166438
4. Photoscape
A fun,easy photo editing software enable you to fix photos,Supports 27 language..157070
5. AIMP
Audio Converter and Recorder moved to different installation,as additional tools.139420
6. Download Accelerator Plus
Download Accelerator Plus (DAP) 9.4 - The world's Most Popular Download Manager.126149
7. ALLPlayer
Next generation of ALLPlayer brings free video converters..124697
8. VDownloader
Download and convert videos into any format (including MP3) with just one click!.103712
9. SopCast
A simple, free way to broadcast video and audio or watch the video..92397
10. Cheat Engine
An open source tool help you with modifying games with brothersoft tools.66530
Destiny Online
Gift Pack
Giveaway
Brothersoft has just been given 500
special gift keys for 2D anime-styled
fantasy MMORPG Destiny Online.
Microsoft Office
2010 RTM Launch
Date - May 12th
Microsoft has officially announced that
May 12th, 2010, is the launch date for
SharePoint 2010 & Office 2010.
If you don't want to get the Newsletters any more, please
1.Login the user control panel here
http://www.brothersoft.com/user/?act=member.login
2.Click "Manage My Newsletters" menu.
3.Choose "Never E-mail me" option from "E-mail me" list at the bottom of the page