Friday, April 9, 2010

வன்னி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. - ததேகூ மன்னாரில் வெற்றி விழாக்கள்

அதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 41,673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,783 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
பதிவுசெய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் வெற்றி விழாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றியீட்டியதையடுத்து மன்னாரின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன

No comments:

Post a Comment