Monday, April 5, 2010

மாவோயிஸ்ட்டுகள் இலங்கை ஊடாக ஆயுதம் கடத்தலாம் என இந்தியா எச்சரிக்கை

இந்திய தீவிரவாத அமைப்பான மாவோயிஸ்டுகள் இலங்கை ஊடாக ஆயுதக் கடத்தலில் ஈடுபடலாம் என கருதி இந்தியாவின் வங்காள மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பணிப்புறை விடுத்துள்ளார்.

வங்காள மாநிலத்தில் அதிக ஆதிக்கும் செலுத்தும் மாவோயிடஸ்டுகள், தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும், நேபாள மாவோயிஸ்ட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மாவோயிஸ்ட்டுக்களின் பூரண பாதை மற்றும் கடல்மார்க்க வழிகளை பாதுகாப்பு தரப்பினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவர்கள் இந்த நிலையில் அவர்கள் பாரிய ஆயுத மறைப்பு மற்றும் கடத்தல் திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பின் உறுதிப்படுத்தல் மூலம் மாவோயிஸ்ட்டுளின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment