Friday, February 19, 2010

யாழ்ப்பாணத்தில் மகேஸ்வரனின் சகோதரர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தோ்தலில், முன்னாள் அமைச்சர் ரீ. மகேஸ்வரனின் சகோதரரான விக்னேஸ்வரன் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கை தவிர்த்து தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியாவில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஐந்து தமிழர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியில் நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.

இதனை தவிர இலங்கையி;ன் எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

முன்னணி கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அதேநேரம் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க ஆளும் முன்னணியின் சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

No comments:

Post a Comment