இந்நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி வரும் மக்களை வரவேண்டாம் என, அங்கு குடியமர்ந்து சிங்களபடையினரின் கொடுமைகளை அனுபவிக்கும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று, கிளிநொச்சியில் கணேசபுரம் பகுதியில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள்.
இவர்களது உடலங்களை இலங்கைப் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் பெண்கள் இருவர் படுகொலை செய்யபட்டு கிணற்றில் வீசப்பட்டதை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்கள் யார் என இனம்காணமுடியாது உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment