கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி கொள்கைகளுக்கு முரணான வகையில் தனித்து சுயாதீனமாக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் குறித்த இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
குறித்த இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கடசியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமான ரெலோ கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment