பாண்டியன்குளம் மல்லாவியைச் சேர்ந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் கலைகடல் வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சசிறூபன் (சுதன்) என்பவர் இனந்தெரியாதோரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். |
28 வயதான இவர் கடந்த 25ம் திகதி அன்று மாலை அவரின் சகோதரனின் வீட்டுப் படலையில் வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டு பின் அவர் அணிந்திருந்த வெனியன் மூலம் கல்லோடு கட்டி அருகிலுள்ள கிணற்றில் வீசப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் சென்ற இவரின் செல்லிடப்பேசி, மணிபேர்ஸ், கைக்கடிகாரம், துவிச்சக்கரவண்டி எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முதன்நாள் நடைபெற்ற இக்கொலையினால் மீளக்குடியேறும் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். |
Friday, January 29, 2010
கிளிநொச்சியில் வர்த்தகர் அடித்துக்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment