Tuesday, January 26, 2010

இன்று பிள்ளையானையும் கருணாவையும் தொலைபேசியூடாக எச்சரித்த சரத் பொன்சேகா

இன்று இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் போது கருணாவையும் பிள்ளையானையும் தொலைபேசியினூடாக சரத் பொன்சேகா அவர்கள் எச்சரித்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது:-
பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சரத் பொன்சேக்கா அவர்கள் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில் நீங்கள் இருவரும் குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றீர்கள்.
இது தொடருமேயாயின் நான் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்ததும் கருணாவும் பிள்ளையானும் வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியேறியதோடு மக்களுக்கு உங்கள் விருப்பம் போலவே உங்கள் வாக்குகளை இட்டுச்செல்லுங்கள் என கூறிச்சென்றனர். வாக்குச்சாவடிகளை விட்டு நீங்கிய கருணா குழுவினரும் பிள்ளையான் குழுவினரும் மீண்டும் வாக்குச்சாவடி நிலையங்களுக்கு வரவில்லை என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிகின்ற போதிலும், இது தொடர்பாக அவர்களிருவரையும் தொடர்புகொண்டு கேட்டவேளை இது தொடர்பாக அவர்கள் விளக்கமளிக்க மறுத்துள்ளனர்.

No comments:

Post a Comment