Tuesday, January 26, 2010

சரத் பொன்சேகா தங்கியுள்ள விடுதி நள்ளிரவில் முற்றுகை: சுற்றிவளைப்பு தொடர்கிறது

கொழும்பில் சரத் பொன்சேகா தங்கியிருந்த சினமன் லேக் வியூ ஹோட்டல் செவ்வாய் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான படையினர் ட்ரான்ஸ் ஏசியா விடுதியைச் சுற்றிவளைத்திருப்பதாகவும், அங்கு தங்கியுள்ள உள் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது. எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அங்கேயே தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் ஹோட்டலின் சுற்றிவளைப்பு தொடர்கிறது.
கொழும்பின் மத்தியில் உள்ள சினமன் லேக் வியூ ஹோட்டலை சுற்றி தொடர்ந்தும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் ஹோட்டலின் உள்ளே எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா , ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஹோட்டலுக்குள் இருந்து தமது தோல்வியை மறைப்பதற்காக சூழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டமையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment