Tuesday, January 26, 2010

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் 13 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கப் புனர்வாழ்வு மையங்களில் உள்ள 3494 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
முதல் தடவையாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment