Wednesday, January 27, 2010

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது குழுவினருக்கோ அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சகல மக்களுக்கும் ஒரே விதமான சட்டமே அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்படுவோர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேதங்களை களைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் கைகோர்த்து கொள்ளுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்

No comments:

Post a Comment