- துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
- நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
- கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
- நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை
- குறள் வெண்பா
- அமரரிடர் தீர வமரம் புரிந்த
- குமரனடி நெஞ்சே குறி
- சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
- சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
- பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
- கீதம்பாடக் கிண்கிணியாட
- மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
- கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
- வரவர வேலா யுதனார்
- வருகவருக வருக மயிலோன் வருக
- இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
- மந்திர வடிவேல் வருக வருக
- வாசவன் மருக வருக வருக
- நேசக் குறமகள் நினைவோன் வருக
- ஆறுமுகம் படைத்த ஐயா வருக
- நீறிடும் வேலவன் நித்தம் வருக
- சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
- சரஹண பவனார் சடுதியில் வருக
- ரஹண பவச ரரரர ரரர
- ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
- விணபவ சரஹண வீரா நமோநம
- நிபவ சரஹண நிறநிற நிறென
- வசர ஹணப வருக வருக
- அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
- என்னை யாளும் இளையோன் கையில்
- பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
- பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
- விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
- ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
- உய்யொளி சௌவும் உயிரையுங்
- கிலியும்கிலியும் சௌவும் கிளரொளியையும்
- நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
- சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக - ஆறுமுகமும் அணிமுடி யாறும்
- நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
- பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
- நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
- ஈராறு செவியில் இலகு குண்டலமும்
- ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
- பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
- நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்
- முப்புரி நூலும் முத்தணி மார்பும்
- செப்பழகுடைய திருவயி றுந்தியும்
- துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
- நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
- இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
- திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
- செகண செககண செககண செகண
- மொகமொக மொகமொக மொகமொக மொகென
- நகநக நகநக
நகநக நகெனடிகுகுண - டிகுடிகு டிகுகுண டிகுண
- ரரரர ரரரர ரரரர ரரர
- ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
- டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
- டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
- விந்து விந்து மயிலோன் விந்து
- முந்து முந்து முருகவேள் முந்து
- என்றனை யாளும் ஏரகச் செல்வ
- மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
- லாலா லாலா லாலா வேசமும்
- லீலா லீலா லீலா விநோதனென்
- றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
- என்றனை வைத்துன் இணையடி காக்க
- என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
- பன்னிரு விழியால் பாலனைக் காக்க
- அடியேன் வதனம் அழகுவேல் காக்க
- பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
- கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
- விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
- நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
- பேசிய வாய்தனை பெருவேல் காக்க
- முப்பத் திருபல் முனைவேல் காக்க
- செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
- கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
- என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
- மார்பை யிரத்தின வடிவேல் காக்க
- சேரிள முலைமார் திருவேல் காக்க
- வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
- பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
- அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
- பழுபதி னாறும் பருவேல் காக்க
- வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
- சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
- நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
- ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
- பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
- வட்டக் குதத்தை வடிவேல் காக்க
- பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
- கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
- ஐவிர லடியிணை அருள்வேல் காக்
- ககைக ளிரண்டும் கருணைவேல் காக்க
- முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
- பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
- நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
- நாபிக் கமலம் நல்வேல் காக்க
- முப்பா நாடியை முனைவேல் காக்க
- எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க
- அடியேன் வசனம் அசைவுள நேரம்
- கடுகவே வந்து கனகவேல் காக்க
- வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
- அரையிரு டன்னில் அனையவேல் காக்க
- ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
- தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
- காக்க காக்க கனகவேல் காக்க
- நோக்க நோக்க நொடியி நோக்க
- தாக்க தாக்க தடையறத் தாக்க
- பார்க்க பார்க்க பாவம் பொடிபட
- பில்லி சூனியம் பெரும்பகை யகல
- வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
- அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
- பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
- கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
- பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்
- அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
- இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
- எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
- கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
- விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
- தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
- என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
- ஆனை யடியினில் அரும்பாவைகளும்
- பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
- நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
- பாவைக ளுடனே பலகல சத்துடன்
- மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
- ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
- காசும் பணமும் காவுடன் சோரும்
- ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
- அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
- மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
- காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
- அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
- வாய்விட்டலறி மதிகெட்டோடப்
- படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
- கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
- கட்டி யுருட்டு கைகால் முறியக்கட்டுக்
- கட்டுக் கதறிடக் கட்டு
- முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
- செக்கு செக்கு செதிற் செதிலாக
- சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
- குத்து குத்து கூர்வடி வேலால்
- பற்று பற்று பகலவன் தணலெரி
- தணலெரி தணலெரி தணலது வாக
- விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
- புலியும் நரியும் புன்னரி நாயும்
- எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
- தேளும் பாம்பும் செய்யான் பூரான்
- கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க - ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
- வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
- சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்
- குகுடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
- பக்கப் பிளவை படர் தொடை வாழை
- கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
- பற்குத் தரணை பருவரை யாப்பும்
- எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
- நில்லா தோட நீயெனக் கருள்வாய்
- ஈரே ழலகமும் எனக்குற வாக
- ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
- மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
- உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
- சரஹண பவனே சையொளி பவனே
- திரிபுர பவனே திகழொளி பவனே
- பரிபுர பவனே பவமொழி பவனே
- அரிதிரு மருக அமரா பதியைக்
- காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
- கந்தா குகனே கதிர்வேலவனே
- கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
- இடும்பனை யழித்த இனியவேல் முருகா
- தணிகா சலனே சங்கரன் புதல்வா
- கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
- பழநிப் பதிவாழ் பால குமரா
- ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
- செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
- சமரா புரிவாழ் சண்முகத் தரசே
- காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
- என்னாவிருக்க யானுனைப் பாட
- எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
- பாடினே னாடினேன் பரவசமாக
- ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
- நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
- பாச வினைகள் பற்றது நீங்கி
- உன் பதம் பெறவே உன்னரு ளாக
- அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்
- மெத்தமெத் தாக வேலா யுதனார்
- சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
- வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
- வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
- வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
- வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
- வாழ்க வாழ்க வாரணத்துவசம்
- வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க
- எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
- எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
- பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
- பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
- பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
- மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
- தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
- கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
- பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
- காலையில் மாலையில் கருத்துட னாளும்
- ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
- நேச முடனொரு நினைவது வாகி
- கந்தர் சஷ்டி கவச மிதனைச்
- சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
- ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
- ஓதியே nஐபித்து உகந்து நீறணிய
- அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
- திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
- மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
- நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
- நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
- எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
- கந்தர்கை வேலாம் கவசத் தடியை
- வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
- விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
- பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
- நல்லோர் நினைவில் நடனம் புரியும்
- சர்வ சத்துரு சங்கா ரத்தடி
- அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
- வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
- சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
- இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
- குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
- சின்னக் குழந்தை சேவடி போற்றி
- எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
- மேவிய வடிவுறும் வேலவா போற்றி
- தேவர்கள் சேனா பதியே போற்றி
- குறமகள் மனமகிழ் கோவே போற்றி
- திறமிகு திவ்விய தேகா போற்றி
- இடும்பா யுதனே இடும்பா போற்றி
- கடம்பா போற்றி கந்தா போற்றி
- வெற்றி புனையும் வேலே போற்றி
- உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
- மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
- சரணம் சரணம் சரஹண பவஓம்
- சரணம் சரணம் சண்முகா சரணம்.
- கந்தர்சஷ்டி கவசம் முற்றிற்று
Thursday, January 21, 2010
தேவராய சுவாமிகள் அருளிய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment