Sunday, January 31, 2010

டக்ளஸ் ஓரங்கட்டப்படுகின்றார் புதிய துரோகிகள் கைகளில் யாழ்ப்பாணம் இன்றைய ஹர்த்தாலும் அதன் செய்திகளும் - சனீஸ்வரன்





டக்ளசை பதவி விலகவேண்டாம் என்று கூறி ஹர்த்தால் ஒன்றுக்கு சிறு குழுக்களால் உத்தரவிடப்பட்டது. வடமராட்சி பஸ் ஒன்று அடித்து நொருக்கப்பட்டது. பல பஸ்கள் கற்கள் வீசி தாக்கப்பட்டன. ஓட்டோ வண்டிகள் விரட்டப்பட்டன. மக்கள் அவதியுற்றனர்.

இதனை அவதானித்த படையினர் உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பஸ்களை ஓட வைத்தனர். ப10ட்டிய கடைகளை திறக்க வைத்தனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த டக்ளஸ் ஸ்ரீதர் குகையில் இருந்து வெளியே வந்து தான் சொல்லி கடைகள் திறக்கப்பட்டதாகவும் தான் சொல்லி பஸ்கள் ஓட வைக்க வேண்டும் என்பது போலவும் நாடகமாடியது நடிகர் சிவாஜிகணேசனே எழுந்து வந்தால் கூட இப்படி நடிக்கமாட்டார் போங்கள். இத்துப்போன அந்த ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு அவர் பட்ட பாடு வடிவேலு செத்தார் போங்கள். அது சரி யாராவது ஒரு தொண்டரை வைத்து தீக்குளிக்க வைத்தால் என்ன டக்கண்ணா? அது சரி உங்களுக்காக ஆர் தீக்குளிக்கப் போறான். சண்முகம் கடையிலை ரீகுடிக்க வைச்சுப்போட்டு தீக்குளிச்சதா ஒரு ஸரேட்மென்ட் எங்கள் தேசத்திலையும் நாபிடிபி நியூசிலையும் போடுங்கோ டக்கண்ணா.

புதிய துரோகிகள்

தொழில்நுட்பக் கல்லூரி யோகராசனும் (உரும்பிராய்) பநோகூ சங்க தலைவன் கிரிதரனும் டக்கண்ணாவின் இடத்தைப்பிடிக்க மகிந்த கொம்பனியின் கால்பிடிப்பதாக தகவல். பிள்ளையார் கொம்பனி பரமேஸ்வரன் பசிலிண்ட எல்லாம் கழுவிப்பாத்தும் முடியாததை உவங்கள் செய்து டக்கண்ணாவை வீழ்த்த சதி செய்கிறான்களாம்.

மக்கள் என்றைக்கும் பிரபாகரன் பக்கம்தான்

மக்கள் அன்று இன்று என்றைக்கும் பிரபாகரனை ஆதர்ச தலைவனாக ஏற்றவர்கள். 35000 போராளிகளின் ஆன்மாக்கள் சுற்றித் தரியும் பூமியில் துரோகிகள் அழியும் காலம் விரைவில் தோன்றும்.

வேல்முருகு தங்கராசா வேலையில்லாதோருக்கு வேலை வழங்குவதாக இப்போது புதுப் புலுடா விடுகிறார்.

மேலும் கோமாளிகளின் செய்திகளோடு மீண்டும் மறு மடலில் சந்திக்கிறேன்

யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

No comments:

Post a Comment