Sunday, January 24, 2010
சிறைக்கம்பிகள் பேசினால்.....!
சிகரத்தை எட்டிப் பார்க்கும்உனக்கு...சிறைக் கம்பிகள் எண்ணுவதுஏனடா...!சிங்களக் காடையர் வீசிய வலையில்சிக்கிய தமிழ்த் தோழா....உன்னைப் பார்த்ததும் வடிகின்றது கண்ணீர்.என்னைப் பற்றுவதால்....உனக்குப் பெருமையல்ல.உன்னை எனக்குள் அனைப்பதால்....அளவில்லா ஆனந்தம்.காரணம் மொழிகின்றேன் கேளடா தமிழா...நீ.... கஞ்சா கடத்தவில்லை.கொலை கற்பழிப்பு செய்யவில்லை.ஆள்க் கடத்தல் கடத்தவில்லை.தமிழுக்காய் வாதாடி இருப்பாய்...தாய் மண்ணிற்காய் போராடி இருப்பாய்.தமிழ் உறவுகளுக்காய்....உன்னையே வெடிகுண்டாய் மாற்றி இருப்பாய்.இது தான் நீ... செய்த குற்றமா...?இல்லை இல்லைஉன்னைப் பார்த்துத் திருந்தட்டும்உண்மைக் குற்றவாளிகள் தோழா...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment