Thursday, January 14, 2010

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள் வவுனியா ஏதிலிகள் முகாமில் ஈரோஸ் அமைப்பினர் பரப்புரை

வியாழக்கிழமை, 14 ஜனவரி 2010 08:10
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகள் எதிர்வரும் ஐனாபதித் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஈரோஸ் அமைப்பினர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

மக்களை அழைத்து கூட்டங்களை வைக்கின்றனர். இதன்போது மகிந்த ராஜபக்சவினால் உங்களுக்கு இந்த அவலம் வந்துள்ளது. அந்த அவலத்தை போக்க மகிந்தவுக்கு வாக்களித்தாலே அவலத்தைப் போக்க முடியும். அவரால் மட்டுமே இதற்கு முடிவு காணபட முடியும்.

இதேநேரம் தடுப்பு முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் படையினர் உங்களுக்கு மாற்றம் வேண்டும் என்றால் சரத்பொன்சேகாவுக்கே வாக்களிக்யுங்கள் என வெளிப்படையாக மக்களிடம் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment