Saturday, March 27, 2010

குப்பைக்குள் வீசப்பட்டுள்ள திலீபனின் நினைவுத்தூபி

சிறீலங்கா இராணுவம் மற்றும் சிங்களக் காடையார்களால் கடந்த திங்களன்று இரவு இடித்து நொருக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுத்தூபி, அதிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள மாநகரசபையின் குப்பைகொட்டும் இடத்திற்கு எடுத்துச் சென்று வீசப்பட்டுள்ளது.
சிங்கள இனவாதிகளின் இந்நடவடிக்கை தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கோபத்தினையும் அளித்துள்ளது. தற்போது யாழ்குடாவில் பெருமளவான சிங்கள உல்லாசப் பயணிகளுடன் பெருமளவில் சிங்களக் காடையர்கள் நடமாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவத்துடன் இணைந்து திலீபனின் நினைவுத் தூபியை இரவோடு இரவாகாகத் தகர்த்ததுடன், அதனை வாகனம் ஒன்றில் ஏற்றிச்சென்று குப்பைகள் போடும் இடத்தில் வீசியுள்ளனர். கடந்த காலங்களில் அநுராதபுரம் தாக்குதலில் ஈடுபட்டு வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளின் வித்துடல்களை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்தியவர்கள், தற்போது அவ்வாறான ஒரு நடவடிக்கையை திலீபனின் நினைவுத் தூபிக்கும் ஏற்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment