Saturday, March 27, 2010

றெஜி என்பவரை கைதுசெய்ய சர்வதேசப் பொலிசார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்



வின் செயலாளரும் மற்றும் பல நாடுகளில் இயங்கிவரும் தொண்டு
நிறுவனங்களை நடத்திவரும் றெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிரேமறெஜி என்பவரை கைதுசெய்ய சர்வதேசப் பொலிசார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். அதாவது இலங்கை உச்சநீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, இவர் இலங்கை நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதைக் காரணம் காட்டி இவரைக் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இன்டர்போலிடம் (சர்வதேச பொலிசாரிடம்) கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் இந்த வேண்டுகோள் இன்டர்போலுக்கு விடுவிக்கப்பட்டதாக அறியமுடிந்தாலும் திரு.றெஜி அவர்களை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, ஒரு வழக்கை இலங்கை அரசு தொடர்ந்துள்ளதுடன், இலங்கை குற்றப்புலாய்வுத் திணைக்களத்தால் இவ்வழக்கௌ ஜோடிக்கப்பட்டு தற்போது, அவர் ஆஜராகாத காரணத்தால் அவரை கைதுசெய்யும் பொறுப்பை இன்டர்போலின் தலையில் கட்டியுள்ளது இலங்கை அரசு.அதாவது தற்போது இலங்கை அரசு யார் மீதும் வழக்கைத் தொடுத்து அவர்களைக் கைதுசெய்து தருமாறு இன்டர்போலிடம் கூறும் என்ற நிலை உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும், மற்றும் ஈழக் கோரிக்கைகளுக்காகச் செயல்படுபவர்களை அடக்க அரசாங்கம் தற்போது புதுவித யுக்திகளைக் கையாண்டு வருகின்றது. இவ்வாறு இலங்கை விடுக்கும் கோரிக்கைகளை எவ்வாறு இன்டர்போல் ஏற்றது என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. எந்த ஆதாரத்தை அடித்தளமாகக் கொண்டு சர்வதேசப் பொலிஸார் றெஜிக்கு பிடியாணை பிறப்பித்தனர் என்பது தெளிவுபடுத்தப்படவேண்டிய ஒன்று.

No comments:

Post a Comment