Monday, March 29, 2010

ஈழத்தமிழ் மக்கள் தமிழகத்திற்கு கடல்வழியாக வரக்கூடாது: தமிழக கரையோர காவல்படையினர்

ஈழத்தமிழ் மக்கள் கடல்வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரக்கூடாது என்றும், அத்துமீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக கரையோர காவல்படையினர் அறிவித்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக கடல் வழியாக இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளார்கள்.
இதேவேளை, தற்போதும் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாகவும், அச்சம் காரணமாகவும் தொடர்ந்தும் ஈழத்தில் இருந்து தமிழ்மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றார்கள்.
இந்நிலையில் ஈழத்தில் போர் முடிவடைந்துள்ளதாகவும், இனிமேல் அங்கிருந்து தமிழர்கள் எவரும் கடல்வழியாக தமிழகத்திற்க வரக்கூடாது என்றும் தமிழக கரையோர காவல்படையினர் அறிவித்துள்ளார்கள். அத்துமீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக கரையோர காவல்படை அதிகாரி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment