Sunday, March 28, 2010

ஈ.பி.டி.பி குழுவினரால் இளைஞர் ஒருவர் அடித்துகொலை: வவுனியாவில் சம்பவம்

வவுனியா சாந்தசோலை பகுதியில் நேற்றிரவு மதுபான விருந்துக்கு அழைத்துசென்ற ஈபிடிபியின் ஆதரவு இளைஞர்கள், அப்பாவி இளைஞர் ஒருவரை அடித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பலனழிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது கொல்லப்பட்ட இளைஞர் தங்கராசா கிருஸ்ணகுமார் எனவும் இக்கொலைக்கு தனிப்பட்ட பகையே காரணம் எனவும், இன்று அவருக்கு பிறந்ததினம் எனவும் மேலும் அறியவந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த இளைஞர் இறப்பதற்கு முன் பொலிஸாருக்கு வழங்கிய உடனடி வாக்குமூலத்தில் ஈபிடிபி கட்சியில் கடந்த உள்ளுராட்சி தேர்லில் 6ம் இலக்கத்தில் போட்டியிட்ட குரு என்ற ஜெயராஜ் மற்றும் ஈபிடிபியின் ஆதரவு மாணவர் அமைப்பைச் சோந்த இளைஞர்கள் மற்றும் துன்பம் என அழைக்கப்படும் தினேஸ் ஆகியோரே தன்னைத் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment