Saturday, March 27, 2010

த.தே.கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அங்கத்தவர்களாக சேருமாறு அன்போடு அழைக்கிறோம். தேசத்தை நேசிப்போம்! த.தே.கூட்டமைப்புடன் அணிதிரள்வோம்

இலங்கை தீவில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில், வடகிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையாக இன்று எம்முன் இருக்கும் ஒரே அரசியல் தலைமையான தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நடத்தி வரும் போராட்டங்கள், அரசியல் நகர்வுகளின் படி நிலைகளில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு தமிழர் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே விளங்கி வருகிறது என்பதை ஈழத்தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிவர்.
பல நெருக்கடிகள்...துன்பங்கள்...வேதனைகளை சுமந்து வந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரேயொரு துரும்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கும் உண்டு.
எனவே மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அங்கத்தவர்களாக சேருமாறு அன்போடு அழைக்கிறோம்.
உங்கள் அரசியல் தலைமை ஒன்றை பலப்படுத்த வேண்டியது உங்கள் கடமையல்லவா..... இன்றே அதை செய்வோம்.
நன்றி தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேலதிக விபரங்கள் http://www.tnainfo.com/ 004915254533772

No comments:

Post a Comment