Friday, January 15, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை: மகிந்த ராஜபக்ச

வெள்ளிக்கிழமை, 15 சனவரி 2010, 05:00.40 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் வடக்கு கிழக்கில் பொலிஸ்நிலையங்களையும் அகற்ற நேரிடுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைத்து, குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் அதிகாரங்களை வேறு பிரிவினருக்கு வழங்கினால் அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் எழக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைவாகவே தீர்மானங்களை மேற்கொண்டேன் என பொரளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் தலைவன் என்ற ரீதியில் சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்பட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராம மக்களைப் போன்றே நகர மக்களின் வேதனைகனையும் அறிந்து செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த சிந்தனையின் கொள்கைத் திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முற்று முழுதாக பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment