Tuesday, January 5, 2010

கொக்காவில் புலிகளின் குரலில் சிறீலங்காவின் ஒளிபரப்பு சேவையி ஆரம்பம்

திகதி: 05.01.2010 // தமிழீழம்
கொக்காவிலில் புலிகளின் குரல் இயங்கிய இடத்தில் சிறீலங்கா அரசு ஒளிபரப்பு சேவையினை தொடங்கவுள்ளது.
வடக்கில் ஒளிபரப்பு சேவையினை விரிபுபடுத்த ஸ்ரீலங்கா 400 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. சிறீலங்கா அரசின் தேர்தல் பரப்புரைக்காவும் மற்றும் அரசியல் நாடகங்களில் ஈடுபட்டுவரும் ஊடகங்களின் செயற்பாடுகள் வடக்கில் தமிழ்மக்களிடம் சென்றடையும் நோக்கில் கொக்காவில் பகுதியில் 172 மீற்றர் உயரமான கோபுரம் அமைக்கும் பணிகளை ஸ்ரீலங்கா அரசு தொடங்கியுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா அரசின் பக்கச்சார்பான ஊடகங்கள் செயற்படவுள்ளதாகவும் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிடப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment