Thursday, January 7, 2010

கல்லறைகள்... கருவறையாய்...
மாறுவது... தமிழீழத்தில் மட்டும் தான்.
சில்லறைகள்... சிதறியதால்...
சிவந்தது... தமிழீழம் மட்டும் தான்.
எம் உயிரும்... நினைவும்... அங்கே.
எம் உடலும்...குரலும்... இங்கே.

நாளை விடிய நாங்கள் இல்லை.
ஏழை வீட்டில் விறகு இல்லை.
முள்ளுக் கம்பி எங்கள் பாதை.
மூலை முடக்கு எங்கள் படுக்கை
விதியைச் சொல்லிக் குற்றம் இல்லை.
வ‌லியைப் போக்க‌ ம‌ருந்தும் இல்லை

நாங்க‌ள் செய்த‌ பாவ‌ம் என்ன‌...
நாங்க‌ள் பெற்ற பாலக‌ர் எங்கே...?
இருட்டு அறையில் பருவ மங்கை...
காம வெறியில் காடையர் அங்கே
வாய்க‌ள் க‌ட்டி கைக‌ள் க‌ட்டி
வாழ்க்கை சாகுது உயிருடன்.

வீதி ஓரம் கழுகுக் கூட்டம்.
வேவு பார்க்குது வெள்ளை வ‌ண்டியில்.
த‌லையை மூடி த‌லையை ஆட்டி
எங்க‌ள் உற‌வைப் பிரிக்குது ஒரு நெடியில்.
போன‌ பிள்ளை பிண‌மாய்த் திரும்ப‌முன்
போய் விட்ட‌து தாய் த‌ந்தை உயிர்.

No comments:

Post a Comment