15 January, 2010 by admin
சில தினங்களுக்கு முன்னர் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ லண்டன் சென்றிருந்தார். தந்தையாரின் தேர்தல் வேலைகளை மிக மும்மரமாக கவனித்து வந்த இவர், இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். இவர் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் பெரும்தொகையான பணத்துடன் லண்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையில் இருந்து இவர் ராஜபக்ஷ குடும்பம் மக்களிடம் சுருட்டிவைத்துள்ள பணத்தில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.அத்துடன் இவர் லண்டன் கேளிக்கை விடுதி ஒன்றில் மது அருந்தி களியாட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கை தூதரகத்திற்காக வேலைசெய்யும் வயதான யுவதியுடன் நடனமாடியதாக அதிர்வு இணையம் அறிகிறது. போதை தலைக்கேறிய நாமல் வீதியிலும் இறங்கி மது அருந்தியது மட்டுமல்லாது, லன்டனில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தினுள்ளும், வெளியேயும்நடனமும் ஆடியுள்ளார். இவர் ஆனந்தக் கூத்தை படங்களில் காணலாம். தந்தையார் அங்கு, வெல்வாரா இல்லை தோற்பார என விளங்காத நிலையில் திண்டாட இங்கு மகன் வீதியில் நடனமாடிக் காட்டுகிறார். இவருக்கு பாதுகாப்பு வழங்க இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் இவர் நடத்தை கண்டு அதிர்ந்துபோனார்கள் எனவும் அறியப்படுகிறது. அன்று இரவு இவருக்கு பாதுகாப்பு வழங்குவதே பெரும் சிரமமாகிப் போனதாக அதிர்வு இணையத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளன. இவர் அதிஷ்டம் தமிழர்கள் செறிந்து வாழாத பகுதியில் ஆட்டம் போட்டு உள்ளார். தமிழர்கள் வாழும் பகுதியில் ஆடி இருந்தால் இன்னும் சுவாரசியமான மேலதிக தகவல் ஒன்றும் கிடைத்திருக்கும்!
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment