ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 02:07.56 PM GMT +05:30 ]
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று நடைபெற்ற போது மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே ஆற்றிய இரங்கல் உரை ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது. அவ்வுரையில், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அவர்கள், "பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி கொடுக்கவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன்" என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment