
கடந்த புதன்கிழமை (24.02.2010)) பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பிரித்தானியா பிரதமர் கோர்டன் பிரவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரின் புகைப்படங்களுக்கு வரிப்புலி உடை வர்ணம் தீட்டியிருந்தனர்.
அரசினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிரித்தானியா தூதரகம் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதா என பிரித்தானியா தூதரக பேச்சாளரிடம் கேட்ட போது பிரித்தானியா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பது வெளிப்படையாக தெரிந்த போதும், பிரித்தானியா தூதரகம் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment